என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவுக்கு செல்ல முடியாததால் பெண் தற்கொலை
Byமாலை மலர்21 Jun 2021 11:25 AM GMT (Updated: 21 Jun 2021 11:25 AM GMT)
நிரக்சனாவுக்கு விசா முடிந்ததால் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்த அவர், அவரது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
கே.கே.நகர்:
திருச்சி கே.கே.நகர் தொண்டைமான் காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மனைவி நிரக்சனா (வயது 33). இருவரும் அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு தயஸ்ரீ (4) என்ற மகளும், தக்சித் என்கிற 11 மாத மகனும் உள்ளனர்.
நிரக்சனாவுக்கு விசா முடிந்ததால் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்த அவர் அவரது தந்தை வீட்டில் வசித்து வந்தார். கணவர் மட்டும் அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தார்.
இந்தநிலையில் அங்கிருந்து வந்த பிறகு நிரக்சனா மீண்டும் அமெரிக்கா செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மன விரக்தியில் கடந்த 2 மாத காலமாக இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி கே.கே.நகர் தொண்டைமான் காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மனைவி நிரக்சனா (வயது 33). இருவரும் அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு தயஸ்ரீ (4) என்ற மகளும், தக்சித் என்கிற 11 மாத மகனும் உள்ளனர்.
நிரக்சனாவுக்கு விசா முடிந்ததால் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்த அவர் அவரது தந்தை வீட்டில் வசித்து வந்தார். கணவர் மட்டும் அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தார்.
இந்தநிலையில் அங்கிருந்து வந்த பிறகு நிரக்சனா மீண்டும் அமெரிக்கா செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மன விரக்தியில் கடந்த 2 மாத காலமாக இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X