search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருமங்கலத்தில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

    திருமங்கலத்தில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    திருமங்கலம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது42). இவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த செல்வி என்பவரை திருமணம் செய்து 3 குழந்தைகளுடன் குறிஞ்சி நகரில் வசித்து வந்தார்.

    ஒரு வருடத்துக்கு முன்பு கணவன்-மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக செல்வி குழந்தைகளை அழைத்துக் கொண்டு நாகப்பட்டினத்துக்கு சென்று விட்டார். இதனால் செல்வம் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    மனைவி பிரிந்த ஏக்கத்தில் இருந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து செல்வத்தின் தம்பி சிவக்குமார் திருமங்கலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×