search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கீரை விற்பனை அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

    தினசரி உணவில் கீரை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வைத்தரும் என்பார்கள்.ஆனால் அது குறித்த விழிப்புணர்வு கொரோனாவுக்கு பிறகு தான் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.
    உடுமலை:

    உடுமலை பகுதியில் உள்ள கிளுவங்காட்டூர் கீரை கிராமம் என்று அடையாளப்படுத்துமளவுக்கு அந்த கிராமத்தில் திரும்பிய திசையெல்லாம் கீரை விவசாயம் நடைபெறுகிறது.கிணற்றுப்பாசனத்தில் ஆண்டு முழுவதும் இங்கு கீரை சாகுபடி மேற் கொள்ளப்படுகிறது.பொன்னாங் கண்ணி, முளைக்கீரை,சிறுகீரை,சுக்கட்டிகீரை,பாலக்கீரை,செங்கீரை,மணத்தக்காளி,தண்டுக்கீரை,புளிச்சக்கீரை என இங்கு சாகுபடி செய்யப்படாத கீரைகளே இல்லை என்று சொல்லலாம்.தற்போது நாள் முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் பலரும் இங்கு வந்து கீரைகளை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
     
    தினசரி உணவில் கீரை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வைத்தரும் என்பார்கள்.ஆனால் அது குறித்த விழிப்புணர்வு கொரோனாவுக்கு பிறகு தான் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.தற்போது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதும்,கூடுதல் சத்துக்கள் கொண்டதுமான உணவு வகைகளை மக்கள் தேடிப்பிடித்து சாப்பிட தொடங்கியுள்ளனர்.இதனால் கீரைகளின் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்து தேவையும் உயர்ந்துள்ளது.எனவே நாங்கள் படிப்படியாக சாகுபடி பரப்பை அதிகரிக்குமளவுக்கு ஏராளமான வியாபாரிகள் தோட்டங்களுக்கே தேடி வந்து கீரைகளை வாங்கி செல்கின்றனர்.

    ஊரடங்கால் உழவர் சந்தைகள் மூடப்பட்ட போது எங்கள் வாழ்வாதாரம் என்ன ஆகுமோ? என்ற கேள்விக்குறி எழுந்தது. இங்கு அறுவடை செய்யப்படும் கீரைகளில் பெருமளவு உழவர் சந்தை மூலமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நாங்கள் பயப்பட்டதற்கு நேர்மாறாக தற்போது முன்பை விட அதிக விற்பனை நடைபெறுவதுடன் கூடுதல் வருவாயும் கிடைக்கிறது.முன்பெல்லாம் மாலையிலேயே கீரைகளை அறுவடை செய்து கட்டுகளாக  கட்டி சாக்குப் பைகளில் போட்டு தயார் நிலையில் வைத்திருப்போம்.அதிகாலையிலேயே கீரைக்கட்டுகளை சரக்கு வேன்களில் ஏற்றி உடுமலை உழவர் சந்தைக்கு கொண்டு செல்வோம்.அங்கு சில்லறை வியாபாரிகள் சிலர் வந்து மொத்தமாக கீரைக்கட்டுகளை வாங்கிச்செல்வர்.

    இதுதவிர ஒன்றிரண்டு கட்டுகளாக பொதுமக்களிடம் விற்பனை செய்வோம்.சில நாட்களில் ஒருசில கட்டுகள் மீதமானாலும் அதற்காக வாடிக்கையாளரை எதிர்பார்த்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதிருக்கும். மேலும் சில்லறை விற்பனையில் ஒரு கட்டு கீரை ரூ.10 வரையே விற்பனை செய்வோம். ஆனால் தற்போது தோட்டத்துக்கே வந்து ரூ.10க்கு மேல் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.தேவைக்கு தகுந்த அளவில் தோட்டத்திலேயே அறுவடை செய்து கொடுப்பதால் வியாபாரிகளுக்கும் புதிதாக கீரைகள் கிடைக்கிறது.எங்களுக்கும் ஒரு கட்டு கூட வீணாகாமல் விற்பனை செய்ய முடிவதுடன் கூடுதல் வருவாயும் கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றனர்.
    Next Story
    ×