search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்
    X
    கவர்னர் பன்வாரிலால் புரோகித்

    கொரோனா குறைந்தவுடன் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: கவர்னர்

    பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
    சென்னை:

    தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை இன்று கூடியது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    * கொரோனா குறைந்தவுடன்  9 மாவட்டங்களிலும் அனைத்து ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி  அமைப்புகளிலும் தேர்தல் நடத்தப்படும்.

    *  பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.


    முக ஸ்டாலின்



    * நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவை கொண்டு வந்து ஜனாதிபதியில் ஒப்புதலை பெறுவோம்.

    *  மாநிலத்திலுள்ள பல அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சேமிப்பு உற்பத்தி திறனும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.


    * சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

    * தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×