என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராதாபுரம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 47). தொழிலாளி. இவரது மனைவி முத்துலெட்சுமி(43).
சம்பவத்தன்று இரவு 2 பேரும் வழக்கம் போல் கதவை பூட்டி விட்டு தூங்க சென்றனர். நள்ளிரவில் பின்பக்க கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அவர் அங்கு வைக்கப்பட்டு இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். ஆனால் அதில் நகை-பணம் இல்லை. அவர் முத்துலெட்சுமியின் கழுத்தில் தங்க செயின் கிடப்பதை நோட்டமிட்டார்.
பின்னர் முத்துலெட்சுமியின் கழுத்தில் இருந்து நைசாக 5 பவுன் எடை கொண்ட தங்க செயினை பறித்துவிட்டு மர்ம நபர் பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்றுவிட்டார். காலையில் எழுந்த முத்து லெட்சுமி, தனது கழுத்தில் கிடந்த செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மர்ம நபர் யாரோ செயினை திருடி சென்றதை அறிந்த அவர் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துலெட்சுமியின் வீடு அந்த தெருவில் கடைசி வீடாக உள்ளது. அதன் பின் புறம் காட்டுப்பகுதி தான் உள்ளது.
இதனால் அந்த வழியாக மர்ம நபர் தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் அந்த தெருவின் முக்கு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்