என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்20 Jun 2021 10:19 AM GMT (Updated: 20 Jun 2021 10:19 AM GMT)
கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனம், ஒரு ஆம்னி வேன் மற்றும் 150 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பாலகுமார் நகர் அமராவதி ஆற்றுப்படுகை நாகாத்தம்மா கோவில் பகுதியில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் மூலனூர் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது 2 கார், 1 ஆம்னி வேன் ஆகியவற்றில் 150-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளைஏற்றிக்கொண்டு 2 மர்ம நபர்கள் கடத்த முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மல்லம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக்கேயன் (38), தனபால் (50) என தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனம், ஒரு ஆம்னி வேன் மற்றும் 150 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X