search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட தனபால் மற்றும் கார்த்திக்கேயன்.
    X
    கைது செய்யப்பட்ட தனபால் மற்றும் கார்த்திக்கேயன்.

    அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது

    கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனம், ஒரு ஆம்னி வேன் மற்றும் 150 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பாலகுமார் நகர் அமராவதி ஆற்றுப்படுகை நாகாத்தம்மா கோவில் பகுதியில் மணல் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் மூலனூர் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 2 கார்,  1 ஆம்னி வேன் ஆகியவற்றில் 150-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளைஏற்றிக்கொண்டு 2 மர்ம நபர்கள் கடத்த முயன்றனர். அவர்களை  போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மல்லம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக்கேயன் (38), தனபால் (50) என தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனம், ஒரு  ஆம்னி வேன் மற்றும் 150 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×