என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர் உள்பட 9 பேரின் உயிரை பறித்த கொரோனா
Byமாலை மலர்19 Jun 2021 11:36 AM GMT (Updated: 19 Jun 2021 11:36 AM GMT)
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்தது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 30 ஆயிரத்து 889 ஆனது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 547 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 39 வயது ஆண், 69 வயது முதியவர், நத்தத்தை சேர்ந்த 35 வயது வாலிபர், 74 வயது முதியவர், 50 வயது ஆண், நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், வத்தலக்குண்டுவை சேர்ந்த 56 வயது ஆண், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், 65 வயது முதியவர் ஆகியோர் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே நேற்று இந்த 9 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த பெண் போலீஸ் உள்பட மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 30 ஆயிரத்து 889 ஆனது. மேலும் நேற்று 233 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 547 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 39 வயது ஆண், 69 வயது முதியவர், நத்தத்தை சேர்ந்த 35 வயது வாலிபர், 74 வயது முதியவர், 50 வயது ஆண், நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், வத்தலக்குண்டுவை சேர்ந்த 56 வயது ஆண், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், 65 வயது முதியவர் ஆகியோர் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே நேற்று இந்த 9 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த பெண் போலீஸ் உள்பட மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 30 ஆயிரத்து 889 ஆனது. மேலும் நேற்று 233 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X