என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செட்டிப்பாளையத்தில் 2½ வயது ஆண் குழந்தை தவறி விழுந்து பலி
செட்டிப்பாளையம்:
பீகாரைச் சேர்ந்தவர் சந்தீப் (வயது 26). இவரது மனைவி கவிதா (24). இவர்களது 2½ வயது ஆண் குழந்தை தியானு.இந்தநிலையில் சந்தீப்பின் அண்ணன் பிரேம் என்பவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை.
இதனால் சந்தீப் தனது குழந்தை தியானுவை அண்ணன் பிரேமுக்கு தத்து கொடுத்தார். பிரேம் பீகாரில் இருந்து குடும்பத்துடன் கோவை வந்தார். இங்கு செட்டிப்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்துவந்தார்.
சம்பவத்தன்று தியானு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிறிய மதில் சுவர் மீது ஏறினார். அங்கிருந்து திடீரென எதிர்பாராத விதமாக தியானு தவறி கீழே விழுந்தார்.
இதில் தியானுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இங்கு சிகிச்சை பெற்று வந்த தியானு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்