என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்19 Jun 2021 11:17 AM GMT (Updated: 19 Jun 2021 11:17 AM GMT)
திருவள்ளூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த சுந்தரவல்லி பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த விடையூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திமிரி ரெட்டி பாளையத்தை சேர்ந்த சுந்தரவல்லி (வயது 33) மற்றும் அவர் கணவர் ராஜகுரு உள்பட பலர் தங்கி செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் ராஜகுரு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது சுந்தரவல்லிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் தனது கணவரிடம் கேட்டபோது, தினமும் சுந்தரவல்லியை அடித்து கொடுமை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அன்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த சுந்தரவல்லி பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதைகண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரவல்லி நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்துப்போனார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த விடையூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திமிரி ரெட்டி பாளையத்தை சேர்ந்த சுந்தரவல்லி (வயது 33) மற்றும் அவர் கணவர் ராஜகுரு உள்பட பலர் தங்கி செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் ராஜகுரு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது சுந்தரவல்லிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் தனது கணவரிடம் கேட்டபோது, தினமும் சுந்தரவல்லியை அடித்து கொடுமை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அன்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த சுந்தரவல்லி பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதைகண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரவல்லி நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்துப்போனார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X