என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்19 Jun 2021 10:46 AM GMT (Updated: 19 Jun 2021 10:46 AM GMT)
வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள காந்தி திருமண மண்டபத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நொய்யல்:
கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சுகாதாரத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள காந்தி திருமண மண்டபத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா தலைமையில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டனர். முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட 200 பேருக்கும், 50 முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில், கலந்து கொண்டவர்கள் முககவசம் அணிந்து உள்ளனரா?, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்று செயல் அலுவலர் கிருஷ்ணவேணி ஆய்வு மேற்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X