search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆத்தூர் அருகே மீனவருக்கு கத்திகுத்து

    ஆத்தூர் அருகே மீனவருக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் அம்புரோஸ் நகரை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 54), மீனவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபாகர் என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் தேவதாஸ் சாலையில் நடந்து சென்ற போது அவர் மீது பைக்கை மோதுவது போல் வந்து நின்ற சுதாகர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தேவதாஸ் தனது மனைவியுடன் சுதாகர் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த சுதாகர் கத்தியால் தேவதாசை தாக்கினார். இதில் அவரது இரண்டு கைகளிலும் வெட்டு விழுந்தது.

    உடனடியாக அவர் காயல் பட்டினம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×