என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆத்தூர் அருகே மீனவருக்கு கத்திகுத்து
Byமாலை மலர்19 Jun 2021 10:15 AM GMT (Updated: 19 Jun 2021 10:15 AM GMT)
ஆத்தூர் அருகே மீனவருக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் அம்புரோஸ் நகரை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 54), மீனவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபாகர் என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தேவதாஸ் சாலையில் நடந்து சென்ற போது அவர் மீது பைக்கை மோதுவது போல் வந்து நின்ற சுதாகர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தேவதாஸ் தனது மனைவியுடன் சுதாகர் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த சுதாகர் கத்தியால் தேவதாசை தாக்கினார். இதில் அவரது இரண்டு கைகளிலும் வெட்டு விழுந்தது.
உடனடியாக அவர் காயல் பட்டினம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X