search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிறுமிக்கு பாலியல் தொல்லை- கைதான கூட்டுறவு வங்கி செயலாளர் சிறையில் அடைப்பு

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமியை கைது செய்தனர்.
    உடுமலை, 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆர்.ஜி.,நகரை சேர்ந்தவர் சின்னச்சாமி(வயது 58). எலையமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளராக உள்ளார்.
    இவரது வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்ணுக்கு 4 வயதில் மகள் உள்ளார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வேலைக்கார பெண் தனது மகளையும்  சின்னச்சாமி வீட்டிற்கு  அழைத்து வந்துள்ளார்.

    அப்போது சின்னச்சாமி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.  சம்பவத்தன்று சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் நடந்த விவரத்தை தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.  

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமியை கைது செய்தனர். பின்னர் திருப்பூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி வருகிற 2-ந்தேதி வரை சின்னசாமியை காவலில் வைக்க உத்தரவிட்டார். 

    இதையடுத்து அவர் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 
    Next Story
    ×