search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிஷீல்டு
    X
    கோவிஷீல்டு

    புனேவில் இருந்து 4.80 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை

    தமிழகத்தின் பல்வேறு தடுப்பூசி மையங்களுக்கு தேவைகேற்ப தடுப்பூசிகள் பிரித்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும்    தடுப்பூசி   போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இருப்பினும் பல்வேறு    தடுப்பூசி   மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.

    கொரோனா தடுப்பூசி


    அந்த வகையில் ஜூன் மாதத்திற்காக 42 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து தினந்தோறும் தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று மாலை புனேவில் இருந்து விமானம் மூலம், 41 பெட்டிகளில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 380 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன.

    இந்த தடுப்பூசிகள் அனைத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை தேனாம்பேட்டையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு    தடுப்பூசி  மையங்களுக்கு தேவைகேற்ப தடுப்பூசிகள் பிரித்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×