search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வெங்கல் அருகே வீட்டில் குட்கா பதுக்கிய வாலிபர் கைது

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த அரை டன் அளவு கொண்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்காவின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே அத்தங்கிகாவனூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆந்திர மாநிலத்தில் இருந்து குட்கா கொண்டு வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வெங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    குறிப்பிட்ட அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த அரை டன் அளவு கொண்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் நாகராஜ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். குட்காவின் மதிப்பு ரூ.2 லட்சம் என தெரிகிறது.
    Next Story
    ×