search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    முதுகுளத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தவர் மரணம்

    முதுகுளத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் அருகே உள்ள கொல்லங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த முதுகுளத்தூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×