search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
    X
    தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

    கூத்தாநல்லூர் அருகே மூங்கில் மரங்கள் தீயில் எரிந்து நாசம்

    கூத்தாநல்லூர் அருகே தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மூங்கில் மரங்கள் எரிந்து நாசமாயின.
    கூத்தாநல்லூர்:

    கூத்தாநல்லூர் அருகே உள்ள விழல்கோட்டகம் கிராமம் கோரையாற்றின் கரையோரத்தில் மூங்கில் தோப்பு உள்ளது. இந்த தோப்பில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மூங்கில் மரங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான மூங்கில் மரங்கள் எரிந்து நாசமாயின.
    Next Story
    ×