search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வார்டில் கவச உடை அணிந்து சென்று ஆய்வு செய்த கலெக்டர்
    X
    கொரோனா வார்டில் கவச உடை அணிந்து சென்று ஆய்வு செய்த கலெக்டர்

    கொரோனா வார்டுக்கு கவச உடை அணிந்து சென்று ஆய்வு செய்த கலெக்டர்

    ஆம்பூர் அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கலெக்டரும், எம்.எல்.ஏ.வும் முழு கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்கு சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். ஆய்வின்போது ஆம்பூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×