என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமத்திவேலூரில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்18 Jun 2021 10:26 AM GMT (Updated: 18 Jun 2021 10:26 AM GMT)
பரமத்திவேலூரில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் காவிரி கரையோரத்தில் நவீன எரிவாயு தகன மேடை உள்ளது. இதன் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் மூதாட்டி ஒருவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உடல் தொங்கிய நிலையில் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த மூதாட்டி கரூர் மாவட்டம் நடையனூர் அருகே உள்ள நத்தமேட்டுப்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி கண்ணம்மாள் (வயது 70) என்பது தெரியவந்தது.
மூதாட்டி கண்ணம்மாள் எதற்காக பரமத்திவேலூர் வந்து காவிரி கரையோரம் மயானத்திற்கு பின்புறம் சென்று தூக்குப்போட்டு இறந்தார்? என்பது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X