search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    காவேரிப்பாக்கத்தில் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்

    பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றின் அவசியத்தை பொது மக்களுக்கு விளக்கினார். முகாமில் 370 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை, பேரூராட்சி நிர்வாகம், தன்னார்வ சேவை அமைப்புகள் சார்பில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் காவேரிப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த முகாமினை சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் தொடங்கி வைத்து தடுப்பூசி போட்டுக் கொள்வது, முக கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றின் அவசியத்தை பொது மக்களுக்கு விளக்கினார். முகாமில் 370 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், பாணாவரம் வட்டார மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×