என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாறுமாறாக ஓடிய வேன் வீட்டிற்குள் புகுந்தது
Byமாலை மலர்18 Jun 2021 8:54 AM GMT (Updated: 18 Jun 2021 8:54 AM GMT)
வீட்டில் இருந்த சத்யா மற்றும் அவரது 2 மகள்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் அருகே இன்று அதிகாலை தனியார் பனியன் நிறுவனத்தை சேர்ந்த வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி வேனை முந்தி செல்ல முயன்றது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி வேன் மீது மோதியது.
இதில் வேன் நிலைதடுமாறி சாலையோரமுள்ள வீடு மற்றும் செல்போன் கடைக்குள் புகுந்தது. அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியாக பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. இல்லையென்றால் பெரிய அளவில் விபத்து நிகழ்ந்திருக்கும்.
வீட்டில் இருந்த சத்யா மற்றும் அவரது 2 மகள்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்த வேன் டிரைவரை பொதுமக்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் பகுதியில் சமீபகாலமாக அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X