என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணிபுரியும் பெண்கள் விடுதியில் தங்க விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்18 Jun 2021 6:59 AM GMT (Updated: 18 Jun 2021 6:59 AM GMT)
உணவு, மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் பகிர்ந்தளிக்கும் முறையில் பெறப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறை சார்பில் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி நெருப்பெரிச்சலில் செயல்பட உள்ளது. இந்த விடுதியில் சேர விருப்பமுள்ள மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்கு குறைவாக உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 50 நபர்கள் தங்கலாம்.
அறை வாடகையாக மாதம் ரூ.400 நிர்ணயிக்கப்படும். உணவு, மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் பகிர்ந்தளிக்கும் முறையில் பெறப்படும். திரும்ப வழங்கப்படும் டிபாசிட் தொகையாக ரூ.2ஆயிரம் செலுத்த வேண்டும்.
அனுமதி நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். விடுதியை ஒப்பந்த முறையில் நடத்தவோ, விடுதியில் தங்கவோ விரும்புவோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு, 0421 2971168 என்ற எண்ணில் வேலை நேரத்தில் தொடர்புகொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X