என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துறையூர் அருகே பார் காவலாளியை காரில் கடத்தி நகை, பணம் பறிப்பு - 2 பேர் கைது
Byமாலை மலர்17 Jun 2021 5:44 PM GMT (Updated: 17 Jun 2021 5:44 PM GMT)
துறையூர் அருகே பார் காவலாளியை காரில் கடத்தி நகை, பணம் பறித்த வழக்கில் 2 பேைர போலீசார் கைது செய்தனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகே பாரில் காவலாளியாக மகேந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு இங்கு வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, கடையை திறந்து மதுபாட்டில்களை எடுத்து தரும்படி மகேந்திரனை மிரட்டி உள்ளனர். அவா் மறுக்கவே, அவரை காரில் ஏற்றி கடத்திச்சென்று அவர் வைத்திருந்த ரூ.30 ஆயிரம், 2 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்தனர்.
பின்னர் அவரை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். உடனே அவர் அங்கிருந்து தப்பி வந்து துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவரை கடத்தி சென்று பணம், நகையை பறித்தது துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த அருண் (வயது 31), செங்காட்டுபட்டியை சேர்ந்த ஆனந்த் (27) மற்றும் மதுபாலன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அருண், ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மதுபாலனை தேடிவருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகே பாரில் காவலாளியாக மகேந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு இங்கு வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, கடையை திறந்து மதுபாட்டில்களை எடுத்து தரும்படி மகேந்திரனை மிரட்டி உள்ளனர். அவா் மறுக்கவே, அவரை காரில் ஏற்றி கடத்திச்சென்று அவர் வைத்திருந்த ரூ.30 ஆயிரம், 2 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்தனர்.
பின்னர் அவரை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். உடனே அவர் அங்கிருந்து தப்பி வந்து துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவரை கடத்தி சென்று பணம், நகையை பறித்தது துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த அருண் (வயது 31), செங்காட்டுபட்டியை சேர்ந்த ஆனந்த் (27) மற்றும் மதுபாலன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அருண், ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மதுபாலனை தேடிவருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X