search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் பதுக்கி வைத்து மது விற்ற 32 பேர் கைது

    கோவையில் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    கோவை:

    போலீசார் ஆர்.எஸ். புரம், வெரைட்டி ஹால் ரோடு, செல்வபுரம், உக்கடம், போத்தனூர், சிங்காநல்லூர், பீளமேடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 18 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 160 மது பாட்டில்கள் மற்றும் ஒரு ஷேர் ஆட்டோ, மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று புறநகர் போலீசார் பொள்ளாச்சி, அன்னூர், கோமங்கலம் உள்பட பகுதிகளில் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 14 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 448 மது பாட்டில்கள், கார், மோட்டார் சைக்கிள், மொபட்டை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×