என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையில் காய வைக்கப்படும் மக்காச்சோளம்
Byமாலை மலர்17 Jun 2021 7:53 AM GMT (Updated: 17 Jun 2021 7:53 AM GMT)
காயவைக்கும் தானியங்களை பாதுகாக்க இரவு நேரங்களில் விவசாயிகள் சாலையின் ஓரம் படுத்து உறங்குவதில் சிரமம் உள்ளது.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதியில் மக்காச்சோளம் முக்கிய பயிராக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. முற்றிய கதிர்களை அறுவடை செய்த பின்பு எந்திரம் பயன்படுத்தி தானியம் பிரித்து எடுக்கப்படுகிறது. இதற்குப்பின்பு சூரிய ஒளியில் நன்றாக உலர்த்திய பிறகே எடையிட்டு விற்பனை செய்ய முடியும்.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விளையும் மக்காச்சோளத்தை காய வைக்க போதிய உலர்களங்கள் இல்லை. இதனால் சாலையில் தானியங்கள் உலர்த்தப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பல டன் எடையுள்ள மக்காச்சோளத்தை மூட்டைகளாக்கி பல கிலோ மீட்டர் தொலைவு எடுத்து வந்து போக்குவரத்து குறைவாக உள்ள சாலைகளில் கொட்டி உலர வைக்கிறோம். இப்படி காய வைக்கும் தானியங்களை பாதுகாக்க இரவு நேரங்களில் விவசாயிகள் சாலையின் ஓரம் படுத்து உறங்குவதில் சிரமம் உள்ளது.
காய்ந்த பின்பு மீண்டும் மூட்டைகளில் சேமித்து எடுத்துச்செல்ல வேண்டும். இதுபோல் பல சிரமங்கள் உள்ளன. போதிய உலர்களங்கள் இல்லாத காரணத்தால் விவசாயிகள் மிகவும் அவதிபடுகின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு உற்பத்தியாகும் தானியங்களை உலர வைக்கும் அளவில் போதிய அளவு உலர்களங்கள் அமைத்து கொடுக்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X