search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தமிழகத்தில் ஒரே நாளில் 3½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 34 ஆயிரத்து 270 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 2,351 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 806 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 1,695 பேருக்கும், 60 வயதுக்குமேற்பட்ட 28 ஆயிரத்து 950 முதியவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள் 927 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 2,754 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 2 லட்சத்து 34 ஆயிரத்து 480 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 34 ஆயிரத்து 270 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று தான் அதிகபட்சமாக 3½ லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×