என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராசிபுரம் அருகே திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்16 Jun 2021 11:11 AM GMT (Updated: 16 Jun 2021 11:11 AM GMT)
ராசிபுரம் அருகே திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எதிரில் சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சத்தியா (32) என்ற பெண்ணுக்கும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் சத்தியா நேற்று அவரது வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து ராசிபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சத்தியா குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி எட்டு மாதங்களில் சத்தியா தற்கொலை செய்து கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X