search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொடைக்கானலில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த 3 பேர் கைது

    கொடைக்கானலில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் செண்பகனூர் சகாயபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இதனால் அவரை சிறுமியின் மாமா கண்ணன்(40) வீட்டிலிருந்து வெளியே அழைத்துச்செல்லவும், மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதும் வழக்கமாக வைத்துள்ளனர்.

    இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கண்ணன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுமட்டுமின்றி குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்த வனராஜ் மகன் மணிகண்டன்(22), செண்பகனூர் அய்யர்கிணறு பகுதியை சேர்ந்த குமார்(40) ஆகியோரும் சிறுமியின் தந்தைக்கு உதவுவது போல நடித்து அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளனர்.

    சம்பவத்தன்று 3 பேரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுக்கவே சிறுமி சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு அவர்கள் 3 பேரையும் எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசாருக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×