search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

    பள்ளிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
    உடுமலை:

    தொடக்கக்கல்வித்துறை உடுமலை ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் என 118 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி மாணவர்களுக்கு 2021-22ம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.

    இதற்காக வட்டார கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவை அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர்கள் கூறுகையில், தொடக்கக்கல்வித்துறையில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.

    உடுமலை ஒன்றியத்தில் 7,650 பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. 3 நாட்களில் அந்தந்த பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். அரசு அறிவிப்புக்கு பின் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுவர்.

    பின்னர் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப்பின்பற்றி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில்  குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்படவும் உள்ளது. மேலும் பள்ளிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் அல்லது பெற்றோர்கள், பாடப்புத்தகங்களை வாங்க வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    இதேப்போல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பாடபுத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×