search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் புதிதாக 453 பேருக்கு கொரோனா

    தூத்துக்குடி மாவட்டத்தில் 222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 846 ஆக அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று டாக்டர் உள்பட 116 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

    கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 765ஆக அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 643 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 44 ஆயிரத்து 583 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1790 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்தது.

    தென்காசி மாவட்டத்தில் 115 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 769 ஆக அதிகரித்தது. நேற்று 188 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 23 ஆயிரத்து 699 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,634 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று ஓய்வு பெற்ற ஆசிரியைகள் 2 பேர் உள்பட 4 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 436 ஆக அதிகரித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 222 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 846 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று நேற்று 363 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை 49 ஆயிரத்து 865 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் 2 ஆயிரத்து 627 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×