search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    திருவையாறு பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்

    திருவையாறு பகுதியில் நேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
    திருவையாறு:

    திருவையாறு பகுதியில் நேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன் மற்றும் திருவையாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று கிருமி நாசினி தெளித்தனர். திருவையாறை அடுத்த காருகுடியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை தாசில்தார் நெடுஞ்செழியன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நடுக்காவேரி ஆரம்பசுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் 120 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×