என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்
Byமாலை மலர்15 Jun 2021 1:14 PM GMT (Updated: 15 Jun 2021 1:14 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை மாவட்டத்திற்குள் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாகி வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கிறது. நேற்றில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் அதிகமான ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் குறைவாக உள்ளது.
27 மாவட்டங்களில் டாஸ்மாக், தேநீர் கடைகள் திறந்த நிலையில் இந்த வார இறுதிக்குள் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதனால் போக்குவரத்து கழகங்கள் 50 சதவீத பேருந்துகளை இயக்கும் வகையில் ஆயத்தமாகி வருகின்றன. அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டதும் அரசு பேருந்துகள் இயங்கும். இந்த பேருந்து சேவை மாவட்டத்திற்குள்ளேயே இயங்கும் எனத் தகவல் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X