search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 329 பேர் பாதிப்பு

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது.
    திருவள்ளூர்:

    தமிழக அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 234 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 215 பேர் ஆஸ்பத்திரிரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,615 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 5 பேர் இறந்து உள்ளனர்.
    Next Story
    ×