search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் வெங்கமேடு செங்குந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(வயது 27). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து காளிதாஸ் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×