search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருவாரூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

    சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வாலிபர், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பகுதி ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து திருவாரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிணமாக கிடந்தவர் அடியக்கமங்கலம் முல்லைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது20) என்றும் இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

    இவர் ரெயில் தண்டவாளத்தை கடந்த போது நாகையில் இருந்த வந்த சரக்கு ரெயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து திருவாரூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×