என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் வேல் (வயது 31).
அதே பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (35). இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். வேலுவுக்கும், மணிமேகலைக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். தங்களது கள்ளக்காதலுக்கு கணவர் மற்றும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக எண்ணிய மணிமேகலை தன்னை எங்காவது அழைத்து சென்றுவிடுமாறு வேலுவிடம் கூறிஉள்ளார்.
இதையடுத்து இருவரும் மும்பைக்கு சென்று விட்டனர். அங்கு கடந்த கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இதனால் சுதாகர் தனது குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற மணிமேகலை மற்றும் வேலுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேல் மட்டும் கல்லிடைக்குறிச்சிக்கு வந்துள்ளார். அவரை எப்படியாவது கொலை செய்து விடவேண்டும் என சுதாகர் முடிவு செய்தார். இதற்காக வேலு தினமும் சென்று வரும் இடங்களை நோட்டமிட்டுள்ளார்.
நேற்று இரவு வேல் அயன்சிங்கம் பட்டியில் உள்ள தனது சகோதரி சித்ராவின் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். தெற்கு பாப்பான்குளம் ஊருக்கு சற்று தொலைவில் உள்ள நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் வேல் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த சுதாகரின் சகோதரர் சுடலைமுத்து (36), வேலை வழிமறித்தார். உடனே சுதாகர் மற்றும் அவரது நண்பரான இசக்கிமுத்து ஆகியோர் அரிவாளுடன் வந்தனர்.
3 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் வேலை இதில் சரமாரியாக வெட்டினர். அவரது இடது கை மணிக்கட்டு துண்டானது. மேலும் சில இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் ரத்தவெள்ளத்தில் வேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
பின்னர் சுதாகர், சுடலை முத்து, இசக்கிமுத்து ஆகிய 3 பேரும் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்