search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் வேன் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    சாலையில் வேன் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து

    நல்லூர் போலீசார் மற்றும் தெற்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் செவந்தாம்பாளையத்தில் இருந்து தாராபுரம் நோக்கி பனியன் துணிகளை ஏற்றி கொண்டு சரக்கு வேன்  சென்றது.வேனை, திருப்பூர் பாலாஜி நகரை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.

    சந்திராபுரம் பண்ணாரியம்மன் நகர் அருகே வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி நடுரோட்டில் ஒரு பக்கமாக கவிழ்ந்தது. அந்த நேரத்தில் சந்திராபுரத்தில் இருந்து செவந்தாம்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் நிலைதடுமாறி விழுந்து வேனின் அடியில் சிக்கி கொண்டார். மேலும் ஒருவரும் சிக்கினார். 

    இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நல்லூர் போலீசார் மற்றும் தெற்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். வேனின் அடியில் சிக்கி கொண்ட நபர் உட்பட 2பேரை போலீசார் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.நடுரோட்டில் கவிழ்ந்த வேன் கிரேன் மூலம் நிலைநிறுத்தப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×