என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானலில் நட்சத்திர ஏரியில் குதித்து ஜீப் டிரைவர் தற்கொலை - உருக்கமான வீடியோ பதிவு சிக்கியது
Byமாலை மலர்15 Jun 2021 2:21 AM GMT (Updated: 15 Jun 2021 2:21 AM GMT)
நட்சத்திர ஏரியில் குதித்து ஜீப் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நாயுடுபுரம், அண்ணா ராமசாமி நகரை சேர்ந்தவர் ஜெசீந்திரன் (வயது 44). ஜீப் டிரைவரான இவர் கொடைக்கானல் பகுதியில் ஜீப் மூலம் தண்டோரா அறிவிக்கும் பணியை செய்து வந்தார். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஜெசீந்திரன் ஜீப்பில் வெளியே சென்றார். இதற்கிடையே சிறிது நேரத்தில் விழித்தெழுந்த அவரது மனைவி வேளாங்கண்ணி, கணவரை தேடியுள்ளார்.
அப்போது அவர் இருந்த அறையில் செல்போன் மட்டும் இருந்தது. இதையடுத்து அந்த செல்போனை எடுத்து வேளாங்கண்ணி பார்த்தார். அதில் வீடியோ ஒன்றை ஜெசீந்திரன் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், தான் மனஉளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் ஜெசீந்திரன் தெரிவித்திருந்தார். மேலும் தனது இந்த முடிவுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் காரணம் இல்லை என்றும், எனது மனைவி, மகன், மகளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் உருக்கமாக பேசியிருந்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வேளாங்கண்ணி, உறவினர்களுடன் சேர்ந்து தனது கணவரை பல்வேறு இடங்களில் தேடினார்.
இதற்கிடையே நட்சத்திர ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக மிதப்பதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படைவீரர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று, நட்சத்திர ஏரியில் மிதந்த உடலை மீட்டனர்.
பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், பிணமாக மிதந்தவர் ஜெசீந்திரன் என்பதும், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நட்சத்திர ஏரியில் குதித்து ஜீப் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடைக்கானல் நாயுடுபுரம், அண்ணா ராமசாமி நகரை சேர்ந்தவர் ஜெசீந்திரன் (வயது 44). ஜீப் டிரைவரான இவர் கொடைக்கானல் பகுதியில் ஜீப் மூலம் தண்டோரா அறிவிக்கும் பணியை செய்து வந்தார். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஜெசீந்திரன் ஜீப்பில் வெளியே சென்றார். இதற்கிடையே சிறிது நேரத்தில் விழித்தெழுந்த அவரது மனைவி வேளாங்கண்ணி, கணவரை தேடியுள்ளார்.
அப்போது அவர் இருந்த அறையில் செல்போன் மட்டும் இருந்தது. இதையடுத்து அந்த செல்போனை எடுத்து வேளாங்கண்ணி பார்த்தார். அதில் வீடியோ ஒன்றை ஜெசீந்திரன் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், தான் மனஉளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் ஜெசீந்திரன் தெரிவித்திருந்தார். மேலும் தனது இந்த முடிவுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் காரணம் இல்லை என்றும், எனது மனைவி, மகன், மகளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் உருக்கமாக பேசியிருந்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வேளாங்கண்ணி, உறவினர்களுடன் சேர்ந்து தனது கணவரை பல்வேறு இடங்களில் தேடினார்.
இதற்கிடையே நட்சத்திர ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக மிதப்பதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படைவீரர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று, நட்சத்திர ஏரியில் மிதந்த உடலை மீட்டனர்.
பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், பிணமாக மிதந்தவர் ஜெசீந்திரன் என்பதும், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நட்சத்திர ஏரியில் குதித்து ஜீப் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X