search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று

    மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 182-ல் இருந்து 183-ஆக உயர்ந்துள்ளது.
    கள்ளக்குறிச்சி:


    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 24 ஆயிரத்து 751 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 22 ஆயிரத்து 207 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 182 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது பெண் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 182-ல் இருந்து 183-ஆக உயர்ந்துள்ளது. 

    மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 720 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 144 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 751-ல் இருந்து 24 ஆயிரத்து 895-ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×