என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 10,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்14 Jun 2021 12:54 PM GMT (Updated: 14 Jun 2021 12:54 PM GMT)
ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 2,700 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 10,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஒதுக்கீடு வரபெற்றவுடன் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 72 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோர் தடுப்பூசி போட்டு கொண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 2,700 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 10,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X