என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலாயுதம்பாளையத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை
Byமாலை மலர்14 Jun 2021 11:17 AM GMT (Updated: 14 Jun 2021 11:17 AM GMT)
பெண் என்ஜினீயர் பிரியங்காவிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் உடல்நிலை சரியாகவில்லை.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அண்ணாநகர்கீழ்மேல் வீதியை சேர்ந்தவர் முருகையன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி செல்வாம்பாள் (வயது45). இவர் காகித ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியங்கா (26) என்ற மகளும், பிரவீன்குமார் (24) என்ற மகனும் உள்ளார். பிரியங்கா என்ஜினீயரிங் படித்துள்ளார் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் பிரியங்காவிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் உடல்நிலை சரியாகவில்லை.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு வழக்கம்போல் பிரவீன் குமார் தனது தாயார் செல்வாம்பாளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று காகித ஆலையில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த பிரியங்காவிற்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரியங்கா வீட்டில் சேலையால் தூக்கில் தொங்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் அக்கம், பக்கத்தினரை அழைத்து, பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பிரியங்காவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து பிரியங்காவின் தாய் செல்வாம்பாள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அண்ணாநகர்கீழ்மேல் வீதியை சேர்ந்தவர் முருகையன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி செல்வாம்பாள் (வயது45). இவர் காகித ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியங்கா (26) என்ற மகளும், பிரவீன்குமார் (24) என்ற மகனும் உள்ளார். பிரியங்கா என்ஜினீயரிங் படித்துள்ளார் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் பிரியங்காவிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் உடல்நிலை சரியாகவில்லை.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு வழக்கம்போல் பிரவீன் குமார் தனது தாயார் செல்வாம்பாளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று காகித ஆலையில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த பிரியங்காவிற்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரியங்கா வீட்டில் சேலையால் தூக்கில் தொங்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் அக்கம், பக்கத்தினரை அழைத்து, பிரியங்காவை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பிரியங்காவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து பிரியங்காவின் தாய் செல்வாம்பாள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X