search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்- கருத்து கேட்க இந்து முன்னணி வலியுறுத்தல்

    பிராமணராக இருந்தால் கூட தகுதிகள் இல்லாவிட்டால் கோவில்களில் பூஜை செய்ய முடியாது,
    திருப்பூர், 

    இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 100 நாட்களுக்குள் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். 

    இதனை இந்து முன்னணி வரவேற்றுள்ள நிலையில் அத்திட்டத்தை  100 நாட்களில் செயல்படுத்துவோம் எனக்கூறுவது பக்தர்களிடம் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்ச்சகர்கள், கோவிலில் பூஜை செய்பவர்கள் என்றாலே அந்தணர்கள் என்ற பொய் பிரசாரத்தை திராவிட கட்சிகள் செய்து வருகின்றன.அதன் நீட்சி தான் இந்த அறிவிப்பு.அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். 

    ஒருவர் அர்ச்சகராக தகுதியுடையவராக இருக்க வேண்டும் என்றால் ஆகம விதிகளை படிக்க வேண்டும்.7 ஆண்டு பயிற்சி பெற வேண்டும். பிறகு தான் பூஜை செய்ய முடியும். பிராமணராக இருந்தால் கூட இத்தகுதிகள் இல்லாவிட்டால் கோவில்களில் பூஜை செய்ய முடியாது.ஒற்றுமையுடன் திகழும் இந்து சமுதாயத்தில் குழப்பத்தை விளைவிக்கக்கூடாது. இதுபோன்ற திட்டங்களை அறிவிக்கும் முன் ஆன்மீகப்பெரியோர், மடாதிபதிகள் மற்றும் சமுதாய அமைப்பினரின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும். 

    இவ்வாறு  அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×