என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுகுளத்தூரில் கொரோனா தடுப்பூசி பணி
Byமாலை மலர்13 Jun 2021 2:32 PM GMT (Updated: 13 Jun 2021 2:32 PM GMT)
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கோவாக்சின் தடுப்பூசி வந்ததை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது.
முதுகுளத்தூர்:
கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், முகாம்கள் ஆகியவற்றில் போடப்பட்டு வந்த தடுப்பூசி போடும் பணிகள் ஜூன் 7-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டன. இதனால் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கோவாக்சின் தடுப்பூசி வந்ததை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. இதில் 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. அந்த வகையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டன. முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X