search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 398 பேருக்கு கொரோனா பாதிப்பு

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 398 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஒரே நாளில் பெண் உள்பட 4 பேர் பலியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    நாமக்கல்:

    தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 12 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,340 ஆக குறைந்தது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,738 ஆக அதிகரித்து உள்ளது.

    இதற்கிடையே நேற்று இம்மாவட்டத்தில் 794 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை இம்மாவட்டத்தில் 34 ஆயிரத்து 724 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 4,668 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 342 பேர் பலியாகி இருந்தனர். நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த செல்லப்பம்பட்டி, ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம் பகுதிகளை சேர்ந்த பெண் உள்பட 4 பேர் இறந்தனர். எனவே பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் இதுவரை இம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 346 ஆக அதிகரித்து உள்ளது.
    Next Story
    ×