search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 48 பேர் மீது வழக்கு

    ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட தலைவர் சின்னசாமி உள்பட 40 பேர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கரூர்:

    கரூர் கோவை ரோடு, பசுபதிபாளையம், வெங்கமேடு, தாந்தோணிமலை உள்ளிட்ட இடங்களில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முன்தினம் காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட தலைவர் சின்னசாமி உள்பட 40 பேர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே டி.என்.பி.எல். சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு வட்டார தலைவர் தீனதயாளன் உள்பட 8 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    Next Story
    ×