search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவை அருகே தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

    கோவை அருகே தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 48). இவர் காட்டூர் பட்டேல் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று குடோனுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் ஆனந்த்குமாரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

    பின்னர் இதுகுறித்து ஆனந்தகுமார் காட்டூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் செல்போனை பறித்தது நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வன்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து செல்போனை பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×