search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாடு
    X
    குடிநீர் தட்டுப்பாடு

    மெலட்டூர் அருகே கரம்பத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு- கிராம மக்கள் கடும் அவதி

    கிராமமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சப்ளை இல்லாததால் பல வரு‌ஷமாக கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் பேரூராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்டது கரம்பத்தூர் கீழத்தெரு கிராமம். இங்கு 70 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். கிராமமக்களின் குடிநீர் மற்றும் இதர தேவைக்காக ஒரு சின்டெக்ஸ் மினி வாட்டர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் மற்றும் இதர தேவைக்காக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. கிராமமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சப்ளை இல்லாததால் பல வரு‌ஷமாக கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தண்ணீருக்காக கிராம மக்கள் அருகிலுள்ள விவசாய பம்பு செட்டுகளை நம்பி வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் கரம்பத்தூர் கிராம மக்களுக்கு கூடுதலாக ஒரு வாட்டர் டேங்க் அமைத்து தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×