என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இ-சேவை மையம் தொடக்கம்-பொதுமக்கள் மகிழ்ச்சி
Byமாலை மலர்11 Jun 2021 7:33 AM GMT (Updated: 11 Jun 2021 7:33 AM GMT)
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு 30 சதவீதம் பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
அரசு உதவித்தொகை, வருவாய், ஜாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வகையில் தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் ஆதார் அட்டை பெறுதல், அரசின் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பயன்களை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் கொரோனா 2-வது அலையின் காரணமாக இ-சேவை மையங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற முடியாமல் தவித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு 30 சதவீதம் பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டதால் உடுமலை தாலுகா அலுவலகத்திலுள்ள ஆதார் மையம் மற்றும் இ-சேவை மையம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
முகக்கவசம், தனிமனித இடைவெளி பராமரித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளுடன் இரு மையங்களிலும் தலா ஒரு ஊழியர் மட்டும் பணியில் உள்ளார். அவசர தேவைக்கான விண்ணப்பங்கள் மட்டும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X