என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே ஒரே பகுதியில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்11 Jun 2021 4:43 AM GMT (Updated: 11 Jun 2021 4:43 AM GMT)
அத்திக்குட்டையில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. எனவே அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு இரும்புதகரத்தால் அடைக்கப்பட்டு உள்ளது.
கோவை:
கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. அதன் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு இரும்பு தகரம் வைத்து அடைக்கப்படுகிறது. அங்கு கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தூவப்படுகிறது.
இந்த நிலையில் கோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவினாசி ரோட்டையொட்டி அத்திக்குட்டை பகுதிக்குள் யாரும் செல்ல முடியாத வகையில் 500 மீட்டர் நீளத்துக்கு இரும்புதகரம் வைத்து அடைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில், சாலையோரம் அத்திக்குட்டை பகுதி தகரம் வைத்து அடைக்கப்பட்டு உள்ளதை பகுதி முழுவதையும் மோட்டார் சைக்கிளில் சென்றபடி ஒருவர் படம் பிடித்துள்ளது பதிவாகி இருக்கிறது.
மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது, அத்திக்குட்டையில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. எனவே அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு இரும்புதகரத்தால் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. அதன் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு இரும்பு தகரம் வைத்து அடைக்கப்படுகிறது. அங்கு கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தூவப்படுகிறது.
இந்த நிலையில் கோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவினாசி ரோட்டையொட்டி அத்திக்குட்டை பகுதிக்குள் யாரும் செல்ல முடியாத வகையில் 500 மீட்டர் நீளத்துக்கு இரும்புதகரம் வைத்து அடைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில், சாலையோரம் அத்திக்குட்டை பகுதி தகரம் வைத்து அடைக்கப்பட்டு உள்ளதை பகுதி முழுவதையும் மோட்டார் சைக்கிளில் சென்றபடி ஒருவர் படம் பிடித்துள்ளது பதிவாகி இருக்கிறது.
மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறும்போது, அத்திக்குட்டையில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. எனவே அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு இரும்புதகரத்தால் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X