search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா - புதிதாக 16,813 பேருக்கு தொற்று உறுதி

    தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 20,91,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,08,838 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 32,049 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 20,91,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 358 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28,528 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,236 பேரும், ஈரோட்டில் 1,390 பேரும், சென்னையில் 1,223 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது 1,88,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×