என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனியில் கொரோனா சிகிச்சைக்கு சென்றவர் வீட்டில் கொள்ளை
Byமாலை மலர்10 Jun 2021 10:39 AM GMT (Updated: 10 Jun 2021 10:39 AM GMT)
தேனி அருகே கொரோனா சிகிச்சைக்காக சென்றவர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள அல்லிநகரம் ஊஞ்சாம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி சாந்தி (வயது 37). இவர் கடந்த 8 வருடமாக விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ரூ.4 லட்சம் கொடுத்து ஒத்திக்கு குடியிருந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவருக்கு துணையாக சாந்தி இருந்ததால் வீட்டை வீட்டு சென்று விட்டனர். சிகிச்சையில் இருந்த கார்த்திக் இறந்து விடவே அதன் பிறகு பெரியகுளத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சாந்தி சென்று விட்டார்.
இதனை பயன்படுத்தி அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த தங்க நகைகள், பணம் ரூ.7 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். சம்பவத்தன்று வீட்டுக்கு திரும்பிய சாந்தி பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இத குறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவுதமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேனி அருகே உள்ள அல்லிநகரம் ஊஞ்சாம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி சாந்தி (வயது 37). இவர் கடந்த 8 வருடமாக விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ரூ.4 லட்சம் கொடுத்து ஒத்திக்கு குடியிருந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவருக்கு துணையாக சாந்தி இருந்ததால் வீட்டை வீட்டு சென்று விட்டனர். சிகிச்சையில் இருந்த கார்த்திக் இறந்து விடவே அதன் பிறகு பெரியகுளத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சாந்தி சென்று விட்டார்.
இதனை பயன்படுத்தி அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த தங்க நகைகள், பணம் ரூ.7 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். சம்பவத்தன்று வீட்டுக்கு திரும்பிய சாந்தி பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இத குறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவுதமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X